Wednesday 30 November 2011

புராணங்களின் மறுவாசிப்பு, பரதவர் வாழ்க்கை

      

பரதவர் வாழ்க்கை

சரித்திரக்கதைகளில் கொற்கையை முத்துக்கொழிக்கும் எழில்நகராகப் படித்து இருந்த சித்திரங்கள் நொறுங்கி, ரத்தமும் சதையுமாக மீன் வீச்சமும் கவிச்சியும் வீசும் சாதாரண மாந்தர்களின் கதையாக 19 &ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்கி  சில தலைமுறைகளை விவரித்துச் செல்கிறார் ஜோ டி குரூஸ். ‘ஆழி சூழ் உலகு’ என்ற தன் முதல் நாவல் மூலமாக தமிழ் வாசக உலகத்தின் கவனத்தைக் கவர்ந்த இவர் கொற்கை மூலம் பரதவர்களின் சமூக வரலாற்றை கிறிஸ்துவத் தின் வருகை உட்பட்ட பலவற்றால் ஏற்பட்ட மாற்றங்களைப் பதிவு செய்துள்ளார்.  தோணி யும் கடலும் மாறாத திரைச்சீலைகளாக எழுந்து நிற்க, எண்ணற்ற மாந்தர்கள் உருவாகி காணாமல் போய்க்கொண்டே இருக்கும் மாபெரும் காட்சியை சுமார் 1174 பக்கங்களில் எழுதியிருக்கிறார். அம்மண்ணின் மைந்தர்களின் மொழியிலேயே எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் அவ்வுலகுடன் தொடர்பில்லா தவர்களுக்கு புதிய அனுபவத்தையும் தருகிறது.       

' கொற்கை - ஜோ டி குரூஸ், விலை  ` 800. 
 நூல் வெளியிட்டோர்: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் & 629001.

No comments:

Post a Comment